நண்பர்கள்
காலங்கள் கடந்து செல்லும்
காயங்கள் மட்டும் நிலைக்கும்
இனிமையான நினைவுகளால் என்றும்
இனிக்கும் அந்த காயங்கள்
பார்க்காத நாட்களில் எப்போது
பார்ப்பேன் என்ற மனநிலை
பார்த்த பொழுது இன்பமாக
பேசிக் கொண்டோம் அந்நாட்களில்
மறக்காத நினைவுகளோடு இன்று
மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
அன்பான உன் வார்த்தைகள்
இன்பமாய் ஒலிக்கின்றன என்னிடம்
No comments:
Post a Comment