Friday, 17 February 2012

innalakal

இன்னல்கள் 
பனிக்கட்டியாக
  கரையவேண்டியவை
கடலாக
  பெருகுகிறதே!
பனித்துளியாக
  மறையவேண்டியவை
பாரங்கற்காக
  குவிகிறதே !
மலரிதழாக      
  மென்மையாகவேன்டியவை 
மரப்பட்டையாக
கடினமகிறதே !

valvu

பட்டாம்பூச்சியின் 
பயணம் -வாழ்வு 

natpu

உன்னதமான நட்பு 
உறவுகள் உன்னை 
உதறி சென்றாலும் 
உண்மையான உள்ளங்கள் 
உனக்காக காத்திருக்கும் 
உன்னதமான நட்பின் 
உருவத்தில் தெய்வமாக !
உள்ளமானது மாறுபட்டு
உலவுகின்ற பொழுது 
உரக்க உரைக்கும் 
உள்ளார்ந்த மொழிகளில் !
உலகமே வெறுத்தாலும் 
உள்ளங்கையில் இருக்கும் 
உயிரான நெஞ்சத்தின் 
உண்மையான அன்பு !
    

naanam

 
      நாணம் 
என்னை கண்டு
வெட்கப்பட்ட
ஒருநொடி போடுமே !
என் பிறவியின்
கடைசி
கணங்கள் வரையில்
உனது நினைவுக்கு !
மௌனமாக
நீ சிரிக்க
மனதிற்கு
சிறைவாசம்
உன்னிடத்தில்!
மீளமுடியவில்லை  
     
மரணத்தை
காட்டிலும்
கொடுமையானது
மௌனமே!
அன்பானவர்களுக்கு
 மட்டும்

Wednesday, 18 January 2012

manam

              மனம் 
உனது பெயரை 
   உச்சரித்த பிறகுதான் 
இசையின் இனிமையை 
     இன்பமாக ரசித்தேன் 
சொற்களின் பொருளை 
     சோதனையைக் கொண்டு 
ஆராய்ந்து அதனால் 
      ஆனந்தம் கொள்கிறேன் 
பார்க்கும் இடமெங்கும் 
       பால்போன்ற  உன்முகமே 
மனதில் தோன்றி 
      மறையாமல் நிற்கிறது 
கடைகளின் பெயர்பலகையில் 
     கண்கள் தேடுகின்றன 
இனிமையான உனது 
     இசையின் பெயரையே 
அடிக்கடி தோன்றி 
    அச்சுறுத்தி செல்கிறது
நினைவுகளில் உனது
    நெஞ்சார்ந்த அன்பு 
மற்றவற்றை நினைக்கவும் 
    மறந்து செல்கிறது 
மங்கையின் மேல்கொண்ட 
    மறவாத நெஞ்சம்
              தோன்ற வேண்டும் 
உள்ளத்தில் தோன்றும் எண்ணங்கள் 
     உயர்ந்ததாக இருக்க வேண்டும் 
வெள்ளத்தின் போக்கினை நீக்கி 
      வேகத்தை கொண்டிடல் வேண்டும்
கள்ளமான மனதின் செயலை 
     கண்டு நீக்கிடல் வேண்டும் 
பள்ளமான நிலத்தையும் என்றும் 
     பயனடைய செய்தல் வேண்டும் 
குள்ளமான நோக்கத்தினை பிறர்க்கு 
      குற்றமற நெக்குதல் வேண்டும்