Tuesday, 8 April 2014
Friday, 24 February 2012
சமுதாயம்
சிந்திக்கும் ஒருபொழுது
சிதைந்து விடுகிறது
சீர்கெட்ட சமுதாயத்தை
சிலநிமிடங்களிலே காணயிலே!
மனமானது அமைதியாக
இருந்தாலும் காணும்
இன்னல்களை யாவும்
குத்துகின்றன மனதை !
உதயமாகும் எண்ணங்கள்
உன்னதமானதாக அமைந்தால்
சமுதாயத்தின் தீயவிழிகளை
சிதைத்து சீர்படுத்தலாம் !
தன்னலம் மட்டுமே
தன்னுரிமை மனிதனுக்கு
தவறுகளை நீக்குவதற்கு
தவறி விடுகின்றான் !
உணர்த்தியவள்
எனக்குள் இருந்த
என்னையே காட்டி
தோல்விகளை எல்லாம்
தொலைக்க செய்தல்
உலகம் இதுதான்
உள்ளம் அமைதிபெற
உண்மையை எனக்கு
உணர்த்தி வந்தாள் !
காரணங்கள் தெரியாமல்
அலைந்தேன் திரிந்தேன் !
அடையாளம் காட்டி
அவையத்தை உணர்த்தினாள்!
கண்ணீரோடு இருந்த
காலத்தை மாற்றி
இன்பமான நாட்களில்
இளைப்பாற வைத்தாள்!
ஓராயிரம் கவிதைகள்
படைத்தேன்அதன்
ஆதாரமாக இருந்து
ஆனந்தம் கொண்டாள்!
-மருத. கண்ணன்
எனக்குள் இருந்த
என்னையே காட்டி
தோல்விகளை எல்லாம்
தொலைக்க செய்தல்
உலகம் இதுதான்
உள்ளம் அமைதிபெற
உண்மையை எனக்கு
உணர்த்தி வந்தாள் !
காரணங்கள் தெரியாமல்
அலைந்தேன் திரிந்தேன் !
அடையாளம் காட்டி
அவையத்தை உணர்த்தினாள்!
கண்ணீரோடு இருந்த
காலத்தை மாற்றி
இன்பமான நாட்களில்
இளைப்பாற வைத்தாள்!
ஓராயிரம் கவிதைகள்
படைத்தேன்அதன்
ஆதாரமாக இருந்து
ஆனந்தம் கொண்டாள்!
-மருத. கண்ணன்
Subscribe to:
Posts (Atom)
-
தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைய கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப்...






