Wednesday, 9 November 2011

nanakiyal aval

         நானாகிய அவள்
 செல்லரித்த குடையானது
என்மனம்
அவளது நினைவுகளால்
 நீங்க புன்னகையால் 
நெகிழ்கிறது 
கல்லான மனது 
காவியம் படைக்கும் 
காதலானது 
எங்களுடையது
 

natpu

                  நண்பர்கள் 
காலங்கள் கடந்து செல்லும் 
காயங்கள் மட்டும் நிலைக்கும் 
இனிமையான நினைவுகளால் என்றும் 
இனிக்கும் அந்த காயங்கள் 
பார்க்காத நாட்களில் எப்போது 
பார்ப்பேன் என்ற மனநிலை
பார்த்த பொழுது இன்பமாக
பேசிக் கொண்டோம் அந்நாட்களில்  
மறக்காத நினைவுகளோடு இன்று 
மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் 
அன்பான உன் வார்த்தைகள் 
இன்பமாய் ஒலிக்கின்றன என்னிடம் 
                        

Sunday, 6 November 2011

ullatthin parvai

உள்ளத்தின் பார்வை 
எங்கேயோ தேடுகிறாய் 
என்னுள்ளே உன்னைக் 
காண  மறுக்கிறாய்!
மனமானது மயங்குறது 
மங்கையின் பார்வையில் !
தேனின் நோக்கினை
தெளிவாய் காட்டுகிறாய்!
தெள்ளுத் தமிழின் 
திகட்டும் மொழியினை!
உள்ளத்தின் இனிமையை 
உதட்டளவில் தெரிகிறது
உறங்கா விழிகள் 
உண்மை உரைக்கின்றன  
உன்னுள் நானிருப்பதை 
உண்மையை மட்டும் 
உரைக்க மறைப்பதேன்
                              -மருத.கண்ணன்

Monday, 22 August 2011

aaval

                        ஆவல் 
பனித்துளியை சுமக்கும் இலையும் 
இனிமை காணும் சிலகணம் !
மலரும் மொட்டும் கொள்ளும்
சிலகணம் தென்றலின் இனிமையை !
 பேசாவிழிகளும் இன்பம் காணும் 
பூவிழியாளை கண்ட பொழுது !
இசையை உணரும் மனமும் 
இனிமை கொள்ளும் இசைக்க !
_என்றும் இனியவன் 

Wednesday, 6 July 2011

iravu

                   இரவு 
உள்ளம் கசந்த ஏழைக்கு 
கள்ளம் இல்லாத அமைதி 
எங்கும் காணாத அமைதி 
ஏழையின் மனதில் மட்டும் 
மங்கிய வாழ்வின் எதிர்காலத்தை 
மனவானில் காணும் முயற்சி 
இளமை பருவத்தின் இன்னலை
இனிதே கழிக்கும் தோற்றம்










Friday, 29 April 2011

punnagai

உணர்வுகள் கசக்கும் நிலையிலும் 
உண்மையினை ஏற்றுக் கொள் 
வாழும் நாள்களில் இன்னல்கள் 
வந்துகொண்டே இருக்கும் நிலையில் 
உள்ளத்தினை மென்மையாக வைத்துப்பார் 
கள்ளக் குணங்கள் காணாது
தேடும் இதயத்தில் இருக்காது 
தெளிவான எண்ணங்கள் என்பதை 
தெள்ளத் தெளிவாக புரிந்துகொண்டால் 
உள்ளத்தில் காணலாகும் புன்னகை
 நிலையில்லா மனிதரை என்றும்
நினைத்து கொண்டு இராதே
நிம்மதியான வாழ்க்கையினை வாழ
நிறைவான இதயத்துடன் இரு

Friday, 15 April 2011

valum nilai

           வாழும்நிலை 
பூமிதனில் என்னடா பிறந்தோம் 
வாழும் நாட்களில் நல்லவனாய் 
உள்ள மனிதர்களுக்கு நன்மையை 
உள்ளவரையில் செய்யவேண்டும் 
மற்றவர்களுக்காக வாழ்வதே சிறந்தது 
வாழும் பொழுதுகளை நேசிப்போம் 
உண்மையான நிலையைவிட்டு விலகாமல் 
உன்னதமான உறவுகளை நேசிக்கவேண்டும் 
காணும் யாவையும் உண்மையானவையல்ல 
பகட்டுத்தனம் நிறைத்து காணப்படுகிறது