உண்மையினை ஏற்றுக் கொள்
வாழும் நாள்களில் இன்னல்கள்
வந்துகொண்டே இருக்கும் நிலையில்
உள்ளத்தினை மென்மையாக வைத்துப்பார்
கள்ளக் குணங்கள் காணாது
தேடும் இதயத்தில் இருக்காது
தெளிவான எண்ணங்கள் என்பதை
தெள்ளத் தெளிவாக புரிந்துகொண்டால்
உள்ளத்தில் காணலாகும் புன்னகை
நிலையில்லா மனிதரை என்றும்
நினைத்து கொண்டு இராதே
நிம்மதியான வாழ்க்கையினை வாழ
நிறைவான இதயத்துடன் இரு
No comments:
Post a Comment