சிவனின் நெற்றிக்கண் தான் -என்
மனதின் நிலையாக காண்கிறேன்
வெளியிலிருந்து பார்ப்பவர்க்கு அமைதியாக-என்
உள்ளே கண்டால் கனலின்போக்கு
கொடுமைகளின் ஊற்றகத்தான் மனம்
கடுமையாக போராடிக்கொண்டு இருக்கிறது
கனலின் தாக்கத்தை கண்டவனுக்கு
புனலின் குளிர்மையை காண்பதேது
வாட்டங்களின் குவியலாய் உள்ளது -அதனை
போக்கத்தான் பூமிதனில் உள்ளாரோ
காணும் வழியெங்கும் முட்பாதையே
காலம் உணர்த்தும் வசந்தத்தை
மருத.கண்ணன்
No comments:
Post a Comment