உணர்ந்து கொள்
தோல்வியை கண்டு துவளாதே
துடிப்புடன் செயல்பட்டால் தான்
தூறும் மழையும் கைக்குள்ளே
துடிக்கும் மின்னலும் உள்ளங்கையிலே
கண்ணீர் மட்டுமே உனக்கில்லை
கடவுளும் இருப்பன் உன்னுள்ளே
உணர்வுகளை உண்மையென நம்பு
உலகமும் உனக்காக ஏங்கும்
நம்பிக்கை என்னும் விதையை
நெஞ்சத்தில் நிதமும் நிறைத்தால்
வாழ்வில் தோன்றும் இன்னலை
வழி தெரியாமல் சென்றுவிடும்
No comments:
Post a Comment