பேசாத மனதின் வலியைத்தான்
பேசும் மனங்கள் ரசிக்கின்றன
தேடும் வழியினை காணவில்லை
தேற்றிகொடுக்காக யாரும் இல்லை
வாடும் மனங்களை வதைப்பதே
வாடிக்கையாக மாறி விட்டன
வன்மம் மனதில் கொண்டே
தன்னுடைய காரியத்தை செய்வோர்
காணும் வழியெங்கும் முட்களின்
காட்சியாக மாறும் நிச்சயம்
பூக்களை பறிக்க நினைத்தால்
பூகம்பம் தான் தோன்றுகிறது
தோல்விகளும் வரலாம் ஒருசிலவாக
வாழ்க்கையே தோல்வியென்றால் எப்படி
No comments:
Post a Comment