Friday, 15 April 2011

thunbam

               துன்பநிலை 
பேசாத மனதின் வலியைத்தான்
பேசும் மனங்கள் ரசிக்கின்றன
தேடும் வழியினை காணவில்லை 
தேற்றிகொடுக்காக யாரும் இல்லை 
வாடும் மனங்களை  வதைப்பதே 
வாடிக்கையாக மாறி விட்டன  
வன்மம் மனதில் கொண்டே 
தன்னுடைய காரியத்தை செய்வோர்  
காணும் வழியெங்கும் முட்களின் 
காட்சியாக மாறும் நிச்சயம் 
பூக்களை பறிக்க நினைத்தால்
பூகம்பம் தான் தோன்றுகிறது
தோல்விகளும் வரலாம் ஒருசிலவாக
வாழ்க்கையே தோல்வியென்றால் எப்படி 

No comments:

Post a Comment