Tuesday 8 April 2014

பூவாகத் தான் 
    பிறக்க ஆசைப்பட்டேன் 
பூமியின் ஏதேனும் 
     பசுமையான இடத்தினில் 
பிறந்ததும் பிறந்தேன் 
     பகட்டான எருக்கம்பூவாக 
இனிமை என்றுமே 
     இறக்குமுகம்  என்னிடத்தில் 
இனிவரும் காலமும் 
     இத்தகைய நிலைதானோ 
இவ்வாறே நிகழ்ந்தால் 
      இறப்பே முடிவாகும் 
              துன்பம் 

பணம் 
அழகு நிறைந்த வெண்மை தேகம்
          பிறக்கும்பொழுது   தோற்றம்          
அழகு இழந்த  மஞ்சள் தேகம்
         பிறர் கையில்  தவழ்ந்த பின்னர்
உன்னை நையப் புதைத்தாலும்
         உரிய மதிப்பினை  கொள்கிறாய்
உன்னை பாதுகாப்பனுக்கு பயனை
         உரித்தாக்க மறுத்து   விடுகிறாய்