Wednesday 14 December 2011

kadal

கடல்பெண்ணே
ஏன் இந்த கோபம் 
கரையின் மீது 
அலையாய் வந்து 
தாக்குகிறாய் !
உன்னுடைய 
காதலனை காணவில்லை 
என்பதனால் !
கண்ணீரை பெருக்கி 
சோகம் கொண்டு 
பொங்கி எழுகிறாய் !
அமைதி என்றும் 
உனக்கில்லையா
மக்களின் மீது 
காட்டிவிடாதே
உனது கோபத்தை 
கருணைக் கொள் 
அவர்களின்மீது !
உன்னை கறைபடுத்தும் 
அவர்களை மன்னித்துவிடு !

varumai

வறுமை 
கண்களில் நீரில்லை
கடுகளவும் உணவில்லை 
உடம்பில் வலுவுமில்லை
உணர்வுகளுக்கு இடமில்லை
காதல் கதையில் மட்டுமே
சாதலை நோக்கி பயணம்
சாதனை எண்ணமிருந்தாலும்
சாத்தியமாக இடமில்லை
உறவுகள் வெறுக்கின்றன
உள்ளதை மறைக்கின்றன
காணும் இடமெல்லாம்
காட்சிகள் மறைகின்றன
ஏன் இந்த
நிலையென எனும்பொழுதே
மரணத்தின் பிடியில்
மங்கின ஒளியாக நான் !

ennaval

இனியவளே 
தென்றலின் குளுமை 
அவளது வார்த்தைகள் 
கருணையின் மழை 
அவளது உள்ளம் 
அன்பின் அவதாரம் 
அவளது பிறப்பு 
இன்பத்தின் அருவி 
அவளது செய்கை 
நிலவின் ஒளியாகும் 
அவளது முகம் 
சந்தனக்குளம்பின் மணம்
அவளது தேகம் 
கொடுத்து சிவந்தன 
அவளது கைகள் 
அன்றில் பறவையவோம்
நானும் அவளும் 
முயற்சி 
முயற்சி என்பதனை 
முன்னெடுத்து பார் !
முடிவுகளை மாற்றும்
முகம் உன்னுடையது !
முதல் என்றும் 
முடிவாக மாறுவதில்லை!
முத்திரை பதிக்கும்
முகவுரை உன்னுடையது  !

Tuesday 13 December 2011


வாடியநிலை 
இதயத்திற்கு  மலரை
அளிக்கவில்லை !
முள்ளையாவது
விதைக்காமல்
இருந்திருக்கலாமே !
காணும் இடம்
யாவையும்
கானல் நிலையே !
நடக்கும்
ஒவ்வொரு அடியும்
அனலின் கூடாரம் !
தேடுபவை
எல்லாம்
தோல்வியின் வண்ணம் !
வசந்தத்தின் பார்வையும்
என்மீது
படும்பொழுது
வெப்பத்தையே
உமிழ்கின்றன !

vetri

வெற்றி 
முள் இல்லாமல் 
ரோஜாவை 
பறிக்கமுடியாது!
வலி இல்லாமல் 
வாழ்க்கையில் 
வெற்றி பெற முடியாது !
உண்மை இல்லாமல் 
எதுவும் 
நிலைபெற முடியாது !
உழைப்பு இல்லாமல் 
உயர்வை 
அடைய முடியாது !

valvu

              
தண்ணீரில் பிறந்தேன் 
கண்ணீரோடு வாழ்கிறேன் 
காலங்கள் நகர்ந்தாலும் 
காட்சிகள் மாறவில்லை
               நிலை