Wednesday, 9 November 2011
natpu
நண்பர்கள்
காலங்கள் கடந்து செல்லும்
காயங்கள் மட்டும் நிலைக்கும்
இனிமையான நினைவுகளால் என்றும்
இனிக்கும் அந்த காயங்கள்
பார்க்காத நாட்களில் எப்போது
பார்ப்பேன் என்ற மனநிலை
பார்த்த பொழுது இன்பமாக
பேசிக் கொண்டோம் அந்நாட்களில்
மறக்காத நினைவுகளோடு இன்று
மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
அன்பான உன் வார்த்தைகள்
இன்பமாய் ஒலிக்கின்றன என்னிடம்
Sunday, 6 November 2011
ullatthin parvai
உள்ளத்தின் பார்வை
எங்கேயோ தேடுகிறாய்
என்னுள்ளே உன்னைக்
காண மறுக்கிறாய்!
மனமானது மயங்குறது
மங்கையின் பார்வையில் !
தேனின் நோக்கினை
தெளிவாய் காட்டுகிறாய்!
தெள்ளுத் தமிழின்
திகட்டும் மொழியினை!
உள்ளத்தின் இனிமையை
உதட்டளவில் தெரிகிறது
உறங்கா விழிகள்
உண்மை உரைக்கின்றன
உன்னுள் நானிருப்பதை
உண்மையை மட்டும்
உரைக்க மறைப்பதேன் -மருத.கண்ணன்
Subscribe to:
Posts (Atom)

-
தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைய கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப்...