Monday, 22 August 2011
Wednesday, 6 July 2011
Friday, 29 April 2011
punnagai
உண்மையினை ஏற்றுக் கொள்
வாழும் நாள்களில் இன்னல்கள்
வந்துகொண்டே இருக்கும் நிலையில்
உள்ளத்தினை மென்மையாக வைத்துப்பார்
கள்ளக் குணங்கள் காணாது
தேடும் இதயத்தில் இருக்காது
தெளிவான எண்ணங்கள் என்பதை
தெள்ளத் தெளிவாக புரிந்துகொண்டால்
உள்ளத்தில் காணலாகும் புன்னகை
நிலையில்லா மனிதரை என்றும்
நினைத்து கொண்டு இராதே
நிம்மதியான வாழ்க்கையினை வாழ
நிறைவான இதயத்துடன் இரு
Friday, 15 April 2011
valum nilai
வாழும் நாட்களில் நல்லவனாய்
உள்ள மனிதர்களுக்கு நன்மையை
உள்ளவரையில் செய்யவேண்டும்
மற்றவர்களுக்காக வாழ்வதே சிறந்தது
வாழும் பொழுதுகளை நேசிப்போம்
உண்மையான நிலையைவிட்டு விலகாமல்
உன்னதமான உறவுகளை நேசிக்கவேண்டும்
காணும் யாவையும் உண்மையானவையல்ல
பகட்டுத்தனம் நிறைத்து காணப்படுகிறது
manam
சிவனின் நெற்றிக்கண் தான் -என்
மனதின் நிலையாக காண்கிறேன்
வெளியிலிருந்து பார்ப்பவர்க்கு அமைதியாக-என்
உள்ளே கண்டால் கனலின்போக்கு
கொடுமைகளின் ஊற்றகத்தான் மனம்
கடுமையாக போராடிக்கொண்டு இருக்கிறது
கனலின் தாக்கத்தை கண்டவனுக்கு
புனலின் குளிர்மையை காண்பதேது
வாட்டங்களின் குவியலாய் உள்ளது -அதனை
போக்கத்தான் பூமிதனில் உள்ளாரோ
காணும் வழியெங்கும் முட்பாதையே
காலம் உணர்த்தும் வசந்தத்தை
மருத.கண்ணன்
thunbam
பேசாத மனதின் வலியைத்தான்
பேசும் மனங்கள் ரசிக்கின்றன
தேடும் வழியினை காணவில்லை
தேற்றிகொடுக்காக யாரும் இல்லை
வாடும் மனங்களை வதைப்பதே
வாடிக்கையாக மாறி விட்டன
வன்மம் மனதில் கொண்டே
தன்னுடைய காரியத்தை செய்வோர்
காணும் வழியெங்கும் முட்களின்
காட்சியாக மாறும் நிச்சயம்
பூக்களை பறிக்க நினைத்தால்
பூகம்பம் தான் தோன்றுகிறது
தோல்விகளும் வரலாம் ஒருசிலவாக
வாழ்க்கையே தோல்வியென்றால் எப்படி
Wednesday, 6 April 2011
kavithai kani
உணர்ந்து கொள்
தோல்வியை கண்டு துவளாதே
துடிப்புடன் செயல்பட்டால் தான்
தூறும் மழையும் கைக்குள்ளே
துடிக்கும் மின்னலும் உள்ளங்கையிலே
கண்ணீர் மட்டுமே உனக்கில்லை
கடவுளும் இருப்பன் உன்னுள்ளே
உணர்வுகளை உண்மையென நம்பு
உலகமும் உனக்காக ஏங்கும்
நம்பிக்கை என்னும் விதையை
நெஞ்சத்தில் நிதமும் நிறைத்தால்
வாழ்வில் தோன்றும் இன்னலை
வழி தெரியாமல் சென்றுவிடும்
Subscribe to:
Posts (Atom)

-
தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்புத் திருவிழா-2015 புதுக்கோட்டை மற்றும் தமிழ்நாடு அரசு தமிழ் இணைய கல்விக் கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப்...