Wednesday 14 December 2011

varumai

வறுமை 
கண்களில் நீரில்லை
கடுகளவும் உணவில்லை 
உடம்பில் வலுவுமில்லை
உணர்வுகளுக்கு இடமில்லை
காதல் கதையில் மட்டுமே
சாதலை நோக்கி பயணம்
சாதனை எண்ணமிருந்தாலும்
சாத்தியமாக இடமில்லை
உறவுகள் வெறுக்கின்றன
உள்ளதை மறைக்கின்றன
காணும் இடமெல்லாம்
காட்சிகள் மறைகின்றன
ஏன் இந்த
நிலையென எனும்பொழுதே
மரணத்தின் பிடியில்
மங்கின ஒளியாக நான் !

No comments:

Post a Comment