Friday 24 February 2012

          உணர்த்தியவள் 
எனக்குள் இருந்த
என்னையே காட்டி
தோல்விகளை எல்லாம்
தொலைக்க செய்தல்
உலகம் இதுதான்
உள்ளம் அமைதிபெற
உண்மையை எனக்கு 
உணர்த்தி வந்தாள் !
காரணங்கள் தெரியாமல்
அலைந்தேன் திரிந்தேன் !
அடையாளம் காட்டி
அவையத்தை உணர்த்தினாள்! 
கண்ணீரோடு இருந்த
காலத்தை மாற்றி
இன்பமான நாட்களில்
இளைப்பாற வைத்தாள்! 
ஓராயிரம் கவிதைகள்
படைத்தேன்அதன்
ஆதாரமாக இருந்து
ஆனந்தம் கொண்டாள்!
                                 -மருத. கண்ணன்  

No comments:

Post a Comment