சமுதாயம் 
சிந்திக்கும் ஒருபொழுது 
சிதைந்து விடுகிறது 
சீர்கெட்ட சமுதாயத்தை  
சிலநிமிடங்களிலே காணயிலே!
மனமானது அமைதியாக  
இருந்தாலும் காணும் 
இன்னல்களை யாவும் 
குத்துகின்றன  மனதை !
உதயமாகும் எண்ணங்கள் 
உன்னதமானதாக அமைந்தால் 
சமுதாயத்தின் தீயவிழிகளை 
சிதைத்து சீர்படுத்தலாம் !
தன்னலம் மட்டுமே 
தன்னுரிமை மனிதனுக்கு 
தவறுகளை நீக்குவதற்கு 
தவறி விடுகின்றான் ! 

 









 
 
